இற க்கும் முன் நடந்தது நடந்தது இதுதான் ?? அட கடவுளே தலை யில் ரத் தம் .. உண்மையை உள றி ய வேலை பார்க்கும் பணிப்பெண் !! அ தி ர்ச்சி யில் திரையுலகம் ..!!
இந்தியளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் வாணி ஜெயராம்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். மேலும் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.
இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.இந்நிலையில், 78 வயதாகும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்துள்ளார். படுக்கை அறையில் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
10.30 மணியளவில் மலர்கொடி வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார், திறக்கப்படவில்லை. போன் செய்து பார்த்துள்ளார், அப்போதும் எடுக்கவில்லை. உடனே அக்கம் பக்கத்திற்கு விஷயம் அறிந்து பாடகியின் சகோதரருக்கு போன் செய்துள்ளனர்.
அவரிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்தபோது வாணி ஜெயராம் தன்னுடைய அறையில், கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார் என கூறியுள்ளார்.வாணி ஜெயராமின் மரணம் சந்தேகமாக உள்ளது என போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.