அட நடிகர் அதர்வாவின் அம்மா இவங்களா ?? இந்த வயத்தில் இவ்வளவு இளமையா இருக்காங்களே ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

2010ல் வெளியான ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பாணா காத்தாடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.இவர் ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம்,

பூமராங், செம போதை ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கணிதன், ஈட்டி, சண்டிவீரன், பரதேசி, இரும்பு குதிரை, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. மறைந்த நடிகர் முரளி ஷோபனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1989இல் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் தான் நடிகர் அதர்வா. இவருக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளனர்.இந்நிலையில் நடிகர்

அதர்வா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இன்னும் இவ்வளவு இளமையா இருக்காங்களே?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *