கோலிவுட் சினிமா துறையில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி.மேலும் இவர் அன்றைய முன்னணி நடிகர்களான கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து பல் வெற்றி படங்களில் நடித்தவர்.நடிகை ரேவதி அவர்கள்
தமிழில் தனது முதல் படமான மண் வாசனை மூலம் அறிமுகமாகி அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வாங்கியுள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த் என 80 களின் முன்னணி நடிகர்களாக
இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், நடிப்பு… இயக்கம்…
திருமண வாழ்க்கையில் மற்றும் தோல்வியை சந்தித்தார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்த ரேவதி பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார். பின் மருத்துவ உதவி மூலம் ரேவதி பெண் குழந்தை பெற்றார். 2018ம் ஆண்டு 5 வயதில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாக அவரே அறிவித்தார்.