அட கிராமத்து பெண்ணாக பார்த்த நம்ம சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது !! என்னம்மா அழகாக இருக்காங்களே !! இதோ லேட்டஸ்ட் புகைப்படம் ..!!
விஜய் டிவி எப்போதுமே புதுமைக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி. எல்லா டிவிகளிலும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வர இப்படி திறமைகைய வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலமும் மக்களை கவரலாம் என நிரூபித்தது விஜய்.இதில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும்
சீரியல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட மக்களிடம் மவுசு குறையவில்லை.அதன்காரணமாகவே நிகழ்ச்சி வெற்றிகரமாக இப்போது பெரியவர்களுக்கான 9வது சீசனை தொடங்கியுள்ளது.இதில் ஏராளமானவர்கள் போட்டு போட்டுள்ளார்கள்.
அதில் சிலரது முகம் மக்களுக்கு இப்போதும் நியாபகம் இருக்கும், அப்படிபட்டவர் தான் பிரித்திகா. கிராமத்தில் இருந்து ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் அந்த சீசனில் டைட்டிலை வென்று 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டி சென்றார். பின் சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும்
பாடிய பிரித்திகா சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.18 வயதாகும் பிரித்திகா சொந்தமாக யூடியூப் பக்கம், இன்ஸ்டா பக்கம் என வைத்துக்கொண்டு நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரை பார்க்கும் ரசிகர்களோ சூப்பர் சிங்கரில் வந்தவரா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.