இந்த வயதிலும் இன்றும் இளமை மாறாமல் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் .. என்னாது அழகிற்கு இதுதான் காரணமாம் .. இதோ !!!

80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நதியா, தன்னுடைய மகள்களை படத்தில் நடிக்க வைக்காமல் வேலைக்கு மற்றும் படிக்கவும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. பின்பு பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதினை இன்றுவரை கொள்ளை கொண்டவராக காணப்படுகின்றார்.

இதுமட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியவர், 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார்.நீண்ட இடைவெளிக்கு பின்பு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த நதியா தற்போது அக்கா மற்றும் அம்மா வேடங்களில் நடித்துவருகின்றார். 54 வயதாகும் நதியாவிற்கு சனம், ஜனா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர்.

பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்குள் நுழைய வைப்பதை வழக்கம் கொண்டுள்ள நிலையில், நடிகை நதியா மட்டும் வித்தியாசமாக இருந்து வருகின்றார்.ஆம் தனது இரண்டு மகள்களை சினிமாவிற்குள் எட்டிப்பார்க்க விடவில்லை நதியா. மூத்த மகள் சனம் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்க இளைய மகள் ஜனா அங்கு வேலை செய்து வருகின்றார்.

54 வயதிலும் இளமையாக இருப்பதற்கு நதியா கூறும் காரணம் என்னவென்றால், முறையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று தனது அழகின் ரகசியத்தினை வெளியிட்டுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *