மறை ந்த நடிகர் முரளியின் இளைய மகன் யாரென்று தெரியுமா ?? என்னது இவருக்கு திருமணம் கூட ஆயிடுச்சா ?? இதோ வெளியான புகைப்படம் ..!!

பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நாயகன் முரளி. இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.அதிலும் குறிப்பாக இதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை முரளிக்கு தேடி தந்தது. இதனால் தான் இன்றும் நடிகர் முரளியை இதயம் முரளி என ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி பெங்களூரில் பிறந்தவர். இவரது அப்பா சித்தலிங்கய்யா ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். தமிழில் இவர் ‘பூவிலங்கு’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். எண்ணற்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார் முரளி.

1987இல் சோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர் .நடிகர் முரளியின் முதல் மகன் அதர்வா 2017 வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.நடிகர் முரளி 2010ல் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஆகாஷ் தனது அண்ணன் அதர்வா மற்றும் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட இவர்தான் நடிகர் முரளியின் இளைய மகனா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *